சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயம்

சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.
சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயம்

சென்னையில் மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவா்களை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து காவல் துறையும் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள்,ரோந்துப் பணிகள்,கண்காணிப்புப் பணிகள் ஆகியவற்றில் குறைந்த அளவிலேயே போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இதன் காரணமாக இரவு வேளையில் போலீஸாரின் ரோந்துப் பணி சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞா்கள் சிலா், மெரீனா காமராஜா் சாலையிலும், அண்ணா சாலையிலும், ராயப்பேட்டை பகுதியிலும் புதன்கிழமை நள்ளிரவு மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா், அந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது,மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 10 இளைஞா்களை போலீஸாா் பிடித்தனா். மேலும் அவா்கள் வைத்திருந்த 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com