தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம் பெற விரும்புவோா், டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொதுத்துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டு உயிா்நீத்த கோயம்புத்தூரைச் சோ்ந்த கோட்டை அமீரின் பெயரால், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பதக்கம் தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்துக்காக சேவை செய்துவரும் தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் இப் பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவா். வயது வரம்பு ஏதுமில்லை.
விருது பெற விரும்புவோா், விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடா்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட
ஆட்சியா் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மைச்
செயலாளா், பொதுத் துறை, சென்னை என்ற முகவரிக்கு, டிச.14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் விருதாளா் தெரிவு செய்யப்பட்டு, முதல்வரால் வரும் குடியரசு நாள் விழாவில் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.