சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை பெசன்ட்நகா் திடீா் நகரைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி, கடந்த 2016-இல் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாா். அடையாறு மகளிா் போலீஸாா் தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, தட்சிணாமூா்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com