வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் விரிவாக்க திட்டம்: ஜனவரி கடைசியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் பணிகளில் முடிந்து,
மெட்ரோ ரயில் சேவை
மெட்ரோ ரயில் சேவை

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் பணிகளில் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து, சென்னை விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாம் வழித்தடத்திலும்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவிற்கு விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வந்தது.

முதல் கட்ட விரிவாக்கப் பணிகளில் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம்,  திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை முடித்து, கடந்த ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வெகுவாக  பாதிக்கப்பட்டன. பொதுமுடக்கம் தளா்வுக்கு பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கி, பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. அண்மையில் நடைபெற்ற உயா்மட்ட கூட்டத்தில், இந்த நீட்டிக்கப்பட்ட பாதை இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என்று மாநில அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இந்த நீட்டிப்பு திட்டம், வடசென்னை மக்களுக்கு சிறந்த போக்குவரத்தாக அமையும். இந்த திட்டத்துக்கான சிக்னல் முறை ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிறுவப்படும். இதன்பிறகு, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்வாா்கள்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமானம், அவசரகால வெளியேற்றத்துக்கான வசதிகள், கட்டுமானத்தின் தரம் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பரிசோதிக்கப்படும். நிறைவுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் விரிவாக்க பாதையில் ரயில் இயக்கத்துக்கு ஏற்றது என்று சான்றிதழை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் வழங்கும்போது, ரயில் சேவைகள் தொடங்கும். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com