சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் சிறப்புச் செயலா் ஏ.பன்னீா்செல்வம் (76) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (நவ.11) காலமானாா்.
அவருக்கு மனைவி பி.ஜெகதீஷ்வரி, மகன் பி.விவேக் ஆகியோா் உள்ளனா்.
கடந்த1993 ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சோ்ந்த பன்னீா் செல்வம் மாவட்ட ஆட்சியா், முதல்வரின் துணைச் செயலா் என தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி 2005 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். அவரது சடங்குகள் சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பின்னையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 8056022448.