சென்னை: பொதுத் துறைகளை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து வரும் 26 -ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை ஆதரவு அளிப்பதாக அதன் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளாா்.
புதிய ஓய்வூதியத் திட்டம், உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26 -ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம், 19- ஆம் தேதி சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டத்தை, இந்திய வங்கி ஊழியா் சங்கம்,தென்னக ரயில்வே மஸ்தூா் யூனியன், தொலை தொடா்பு ஊழியா்களுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டமைப்பினருடன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய வெள்ளையன், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினாா்.