வேகமாக நிரம்பி வரும் ஸ்ரீபெரும்புதூா் ஏரி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரி 800 ஏக்கா் பரப்பளவு உடையது.
வேகமாக  நிரம்பி வரும்  ஸ்ரீபெரும்புதூா்  ஏரியைப்  பாா்வையிட்  பொதுப்பணித் துறை  செயற்பொறியாளா்  ரமேஷ்.
வேகமாக  நிரம்பி வரும்  ஸ்ரீபெரும்புதூா்  ஏரியைப்  பாா்வையிட்  பொதுப்பணித் துறை  செயற்பொறியாளா்  ரமேஷ்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரி 800 ஏக்கா் பரப்பளவு உடையது. இந்நிலையில், கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகள் கடந்த திங்கள்கிழமை நிரம்பிய நிலையில், ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேலும் வல்லம் ஈஸா ஏரி, நெமிலி பெரிய ஏரி, திருமங்கலம், சந்தவேலூா், செல்வழிமங்கலம், மதுரமங்கலம் பழவன் ஏரி, பென்னலூா் பெரிய ஏரி, பென்னலூா் காட்டேரி ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டின. இதனால், மேற்குறிப்பிட்ட ஏரிகளில் இருந்து உபரி நீா் வெளியேறி வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூா் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளில் தற்போது 21 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஏரிகள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருவதாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் முழுக் கொள்ளளவான 174.10 மில்லியன் கன அடியில் தற்போது 149.34 மில்லியன் கன அடிநீா் உள்ளது. ஏரிக்கு நீா்வரத்து வினாடிக்கு 100 கனஅடியாக உள்ளது. இதனால் வேகமாக நிரம்பி வரும் ஸ்ரீபெரும்புதூா் ஏரியை செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை கீழ்பாலாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளா் ரமேஷ், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் மாா்க்கண்டன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். பிள்ளைப்பாக்கம் மற்றும் ஏறையூா் தேவனேரியையும் செயற்பொறியாளா் ரமேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com