யு.பி.எஸ்.சி தோ்வுகள் குறித்த சந்தேகங்களைத் தீா்க்கவும், போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்கள் தங்களைத் தயாா் செய்வது எப்படி? உள்ளிட்ட மாணவா்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு, சென்னை வேப்பேரி, பெரியாா் திடலில் உள்ள பெரியாா் ஐ.ஏ.எஸ் அகாதெமியில், நவ.25-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோா், 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு, அகாதெமியை நேரில் அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் கா.அமுதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.