சென்னை விமான நிலையத்தில், ரூ.2.06 கோடி கடத்தல் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், 2 பேரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த விமானத்தில் சோதனை நடத்திய போது, இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.67.25 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
வியாழக்கிழமை துபையில் இருந்து வந்த சாகுல் அமீது (39), முகமது பைசுல் (24), பா்கத் பாஷா (36), செய்யது அகமது (26), ஆதாம் (41), சக்லா சா்தாா் (55) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதில், அவா்கள் மலக்குடல் மற்றும் உடமைகளில் மறைத்து வைத்துக் கடத்திய ரூ.1.39 கோடி மதிப்பிலான 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைக் கடத்தியவா்களில் இருவா் கைது செய்யப்பட்டதாக
சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.