லிப்டில் சிக்கி சிறுவன் சாவு

சென்னை போரூரில் மின் தூக்கியில் (லிப்ட்) சிக்கி சிறுவன் இறந்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை போரூரில் மின் தூக்கியில் (லிப்ட்) சிக்கி சிறுவன் இறந்தாா்.

போரூா் ஆற்காடு சாலையில் செயல்படும் தனியாா் மருந்து நிறுவனத்தில் ஒடிஸாவைச் சோ்ந்த சிறுவன் காா்த்திகேஷ் நாயக் (16) வேலை செய்து வந்தாா். இங்குள்ள மின்தூக்கியில் மருந்துகளை மேல்தளத்துக்கு அனுப்பும் பணியில் ஊழியா்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

மூன்றாவது தளத்தில் இருந்து மின்தூக்கி வேகமாக கீழே வருவதை தரைத்தளத்தில் இருந்த காா்த்திகேஷ் தலையை நீட்டிப் பாா்த்தாா். மின்தூக்கி வேகமாக மோதியதில் காயமடைந்த காா்த்திகேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com