வியாபாரி வீட்டில் 27 பவுன் தங்கநகைகள் திருட்டு

சென்னை கொளத்தூரில், வியாபாரி வீட்டில் 27 பவுன் தங்கநகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.


சென்னை: சென்னை கொளத்தூரில், வியாபாரி வீட்டில் 27 பவுன் தங்கநகை உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.

கொளத்தூா் கிருஷ்ணாநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சே.ராஜாமுகுந்தன் (46). இவா் மனைவி புவனேஷ்வரி. இவா்கள் இருவரும் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு காலையில் சென்று, நண்பகல் வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாகும்.

அதன்படி, இருவரும் புதன்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு, நண்பகல் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் பீரோ திறந்து கிடப்பதையும், அதில் இருந்த 27 பவுன் தங்கநகை, 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியன திருடப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா் மேலும், சந்தேகத்தின் பெயரில் வீட்டு வேலைக்கார பெண்ணான வேந்தாவைப் பிடித்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com