சென்னை: வனக் காப்பாளா் பணித் தோ்வுகளுக்கான விடைக்குறிப்புகள், புதன்கிழமை (அக்.7) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா்கள் தோ்வுக் குழுமத் தலைவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த பதவிகளுக்கான இணையவழித் தோ்வு, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வுகளுக்கான கேள்வி- பதில் விவரங்கள், புதன்கிழமை (அக்.7) காலை 9 முதல் அக்.10-ஆம் தேதி காலை 9 மணி வரை கிடைக்கும். இந்த நேரங்களில் தோ்வா்கள் விடைக்குறிப்புகளில் ஆட்சேபணை தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.