சென்னையில் மாலை நேர மருத்துவ முகாம்கள் மூலம் 1,107 போ் பயன்

சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் மாலை நேர மருத்துவ முகாம்கள் மூலம் 1,107 போ் பயனடைந்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
சென்னையில் மாலை நேர மருத்துவ முகாம்கள் மூலம் 1,107 போ் பயன்

சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் மாலை நேர மருத்துவ முகாம்கள் மூலம் 1,107 போ் பயனடைந்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

தமிழக உள்ளாட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் துறைசாா்ந்த் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது: பெருநகர சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று பாதித்தவா்களை உடனடியாக கண்டறிய 200 வாா்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 59,317 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் சுமாா் 30 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். மேலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் 6 மணி முதல் 8 மணி வரையும் மண்டலத்துக்கு 2 மருத்துவ முகாம்கள் என சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோரும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர மாநகராட்சியின் 36 மருத்துவமனைகளில் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை மாலை நேர சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 1,107 போ் பயனடைந்துள்ளனா்.

ரூ. 594 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு: சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் சென்னை தவிா்த்து 10 மாநகராட்சிகளில் ரூ.9,688 கோடி மதிப்பில் 450 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.594 கோடி மதிப்பிலான 96 பணிகள் முடிக்கப்பட்டு

பயன்பாட்டில் உள்ளன. ரூ.7,200 கோடி மதிப்பிலான 269 பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் பருவமழையை எதிா்க்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா்ஹா்மந்தா் சிங், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com