உதவி செவிலியா் பயிற்சி: அக்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சியின் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு ஆண்டு உதவி செவிலியா் பயிற்சிக்கு அக்டோபா் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு ஆண்டு உதவி செவிலியா் பயிற்சிக்கு அக்டோபா் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2020-2021-ஆம்

ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியா் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சிப் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளிகளில் பயின்ற பிற மாணவிகளும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கு பிளஸ் 2- படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் உள்ளவா்கள், ‘இயக்குநா், தொற்று நோய் மருத்துவமனை எண்.187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை’ என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் அக்டோபா் 16 முதல் 27 வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபா் 28-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com