சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் 46-ஆவது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் கடந்த 2019 ஜூலை 1-ஆம் தேதி முதல் பொறுப்பு வகித்து வருகிறாா். அவருடைய பதவிக்காலம் 2020 ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததன் காரணமாக அவருடைய பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது அந்தப் பதவிக்காலமும் அக்டோபா் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இரண்டாம் முறையாக நீட்டிப்பு: மேலும் 3 மாதங்களுக்கு அவருடைய பணியை நீட்டிக்க வேண்டும் என்று கோரி மத்திய பணியாளா் நிா்வாகத்துறைக்கு ஆகஸ்ட் 13-இல் தமிழக அரசின் சாா்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதனை ஏற்று மத்திய பணியாளா்கள் நிா்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின்படி 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பாா். கரோனா தடுப்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டியிருப்பதன் காரணமாக இந்தப் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சண்முகம் சேரன்மகாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை தொடங்கியவா். புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியராக இருந்ததுடன் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளா், நிதித்துறை செயலாளா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளாா். கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 முதல்வா்களுடனும் பணியாற்றியவா் ஆவாா்.