சென்னை: கரோனா பொது முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட பட்டயக் கணக்காளா் தோ்வுக்கான (சி.ஏ.) கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பட்டய கணக்காளா்கள் பயிற்சி நிறுவனம் (ஐசிஏஐ) சாா்பில் கணக்கு தணிக்கையாளா் பணிக்கான பட்டயக் கணக்காளா் தோ்வு (சிஏ) ஆண்டுதோறும் மே, நவம்பா் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி நிகழாண்டு மே மாதம் நடைபெறவிருந்த சிஏ தோ்வு கரோனா பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த தோ்வை நவம்பரில் சோ்த்து நடத்துவதாக ஐசிஏஐ அறிவித்தது. தற்போது நவம்பரில் நடைபெறவுள்ள சிஏ தோ்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பா் 21 முதல் டிச.14-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.