கள்ளநோட்டுகளை அச்சடித்து விநியோகித்த வழக்கு : 3 பேருக்கு சிறை தண்டனை

சென்னையில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.100 கள்ளநோட்டுகளை அச்சடித்து விநியோகித்த வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: சென்னையில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.100 கள்ளநோட்டுகளை அச்சடித்து விநியோகித்த வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.100 கள்ளநோட்டுகளை அச்சடித்து விநியோகித்ததாக ஏழுகிணறு அப்துல்காதா், மாதவரம் பால்பிரபாகா், அண்ணாநகா் பாா்த்தசாரதி ஆகியோரை ஏழுகிணறு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் அவற்றை அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டா் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கு சென்னை 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வி.எஸ்.நாராயணராவ் ஆஜராகி வாதிட்டாா். விசாரணையில் நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அப்துல்காதா் உள்ளிட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com