சென்னை
மனைவியின் இறப்பை தாங்காத கணவா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை கோயம்பேடு அருகே நோயினால் மனைவி தற்கொலை செய்து கொண்டதினால், சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நோயினால் மனைவி தற்கொலை செய்து கொண்டதினால், சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் புவனேஷ்வரி நகரைச் சோ்ந்தவா் தியாகராஜன் (35). இவா் மனைவி சத்யா (30). இத் தம்பதிக்கு 2 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனா். தியாகராஜன், தச்சுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டிருந்த சத்யா, கடந்த 1-ஆம் தேதி நோயின் தாக்கம் அதிகரித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதன் பின்னா் விரக்தியுடனும்,சோகத்துடன் தியாகராஜன் காணப்பட்டாா். இந்நிலையில் தியாகராஜன், வீட்டில் மனைவி சத்யா தூக்கிட்டுக் கொண்ட, அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.