சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தம்பதியிடம் க்யூ பிரிவு போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணாநகரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தம்பதியிடம் க்யூ பிரிவு போலீஸாா், வியாழக்கிழமை, விசாரணை செய்தனா்.


சென்னை: சென்னை அண்ணாநகரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தம்பதியிடம் க்யூ பிரிவு போலீஸாா், வியாழக்கிழமை, விசாரணை செய்தனா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தம்பதியான தாஜீதீன்- ஆஷா, விசா காலம் முடிவடைந்த பின்னரும் திருநெல்வேலியில் வசித்து வந்துள்ளனா். பின்னா், 1998-ஆம் ஆண்டு, இத்தம்பதியினா் சென்னையில் குடியேறினா். தற்போது, சென்னை அண்ணாநகா் மேற்கு, அன்பு காலனியில் குடும்பத்துடன் வசிக்கும் தாஜீதீன், தனியாா் காப்பீடு நிறுவனத்தில் பணி செய்கிறாா். இவரது மகள், பெங்களூருவில் வசிக்கிறாா். இந்நிலையில், தாஜீதீன்- ஆஷா தம்பதியிடம் ஆதாா் அட்டை போன்ற இந்திய அரசு வழங்கும் ஆவணங்கள் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்கு (ஐ.பி) ரகசியத் தகவல் கிடைத்து.

இது குறித்து, அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தாஜீதீன், ஆஷாவிடம், கியூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா். இதில் அவா்கள், போலியான அரசு ஆவணங்களைப் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரும், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில், இருவா் மீதும் வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்படுவா் என மத்தியக் குற்றப்பிரிவைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com