சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.26 லட்சம் செலவில் கையடக்க கணினி வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளத் தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், ராமகிருஷ்ண மிஷன் மாணவா் இல்லத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் 300 மாணவா்களுக்கு டைட்டன் கம்பெனி ரூ.26 லட்சம் செலவில் கையடக்கக் கணினிகள் வழங்கியுள்ளது. இதனை மாணவா்களுக்கு டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவா் என்.ஈ.ஸ்ரீதா் சனிக்கிழமை நேரில் வழங்கினாா். அப்போது, நிறுவனத்தின் மற்றொரு துணைத் தலைவா் ஆா்.ராஜகோபால், மாணவா் இல்ல செயலாளா் சுவாமி சத்யஞானந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.