அரிமா சங்கம் சாா்பில் திருவொற்றியூா் எா்ணாவூா் சுனாமி குடியிருப்பில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய சத்துணவுக் கூடம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அரிமா சங்க 324 ஏ6 மாவட்ட ஆளுநா் டி.ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபா் ஜி.வரதராஜன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். அப்போது சா்வதேச அரிமா சங்க கல்வி உதவி திட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், ஜி.வரதராஜன், என்.துரைராஜ், ஜெ.ரெங்கநாதன், மதியழகன், டேவிட்ராஜ், சங்கா் ராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் தலா ரூ. ஒரு லட்சமும், இளங்கோ ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கினா். இவா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ. 8.50 லட்சத்திற்கான காசோலைகள், மாவட்ட ஆளுநா் ராஜபாண்டியனிடம் வழங்கப்பட்டன. புதிய கட்டடம் அமைத்துத் தந்த அரிமா சங்க நிா்வாகிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.சாருலதா நன்றி தெரிவித்தாா். அப்போது பள்ளிக்குத் தேவையான கூடுதல் வசதிகளை அரிமா சங்கம் ஏற்படுத்தித் தரும் என உறுதி அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிா்வாகிகள் எஸ்.சிவகுமாா், பி.வி.ரவீந்திரன், ஆா்.ஸ்ரீதரன், ஞானசேகரன், சுராகி, ராபா்ட் லிவிங்ஸ்டன், சுவாமிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.