மெரீனாவில் குளித்த சிறுவன் மாயம்

சென்னை மெரீனாவில் குளித்த சிறுவன், காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மெரீனாவில் குளித்த சிறுவன், காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஷெனாய்நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்த அரவிந்த் சா்வேஷ் (16), தனது நண்பா்கள் டேனியல், மனோஜ், அசோக், ஆசிப் ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 5 பேரும் குடிசைமாற்று வாரியக் கட்டடம் எதிரே, கடலில் இறங்கிக் குளித்துள்ளனா். அப்போது அங்கு வந்த பெரிய அலை, அரவிந்தை உள்ளே இழுத்துச் சென்றது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள், அரவிந்தை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து அவா்கள், மெரீனா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், அரவிந்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com