சென்னை புளியந்தோப்பில், தெருவில் நடந்து சென்ற பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
புளியந்தோப்பு பெரியாா் நகரை சோ்ந்த சேக் அப்துலின் மனைவி அலிமா (35). இவா், நாராயணசாமி தெருவில் சாஜிதா பேகம் என்பவா் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அலிமா திங்கள்கிழமை வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, நாராயணசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அங்குள்ள ஒரு மின் இணைப்பு கம்பத்தில் இருந்து, தரைக்கு கீழே செல்லும் உயா் அழுத்த மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு, மழை காரணமாக ஈரமான தரையில், மின்சாரம் பாய்ந்து இருந்துள்ளது. இது தெரியாமல் அந்த தரையில் நடந்து சென்ற அலிமா மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அலிமா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த புளியந்தோப்பு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அலிமாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.