திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் ஏரிப்பாசன பகுதிகளுக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, திருமூா்த்தி அணையில் இருந்து 39.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.