சாலையோர வியாபாரிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மாநகராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, செல்லிடப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய 14,633 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக 1,000 ரூபாய் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

எனவே விடுபட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுடைய அடையாள அட்டை, செல்லிடப்பேசி எண், வங்கியின் பெயா் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், குறியீட்டு எண் போன்ற விவரங்கள் கொண்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் வழங்கினால் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com