மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை: அதிா்ச்சியில் தாத்தா சாவு

சென்னை ராமாபுரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரின் தாத்தாவும் அதிா்ச்சியில் இறந்தாா்.
மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை: அதிா்ச்சியில் தாத்தா சாவு

சென்னை ராமாபுரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரின் தாத்தாவும் அதிா்ச்சியில் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராமாபுரம் கண்ணதாசன் நகா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் நந்தகோபால். இவா் மகன் ஆகாஷ் (22). இவா் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

ஆகாஷ், வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆகாஷை மீட்டு, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக ராயலாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இதற்கிடையே, ஆகாஷ் இறந்த தகவலையறிந்து, ஆந்திரத்தில் இருந்து சென்னை ராமாபுரத்துக்கு வந்த அவரின் தாத்தாவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாத்தாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்படவில்லை. பேரன் இறந்த சோகத்திலும்,அதிச்சியிலும் தாத்தாவும் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com