சென்னை: தமிழ்நாடு வனத் துறையின் தலைமை வன உயிரினக் காப்பாளராக சையத் முஸாமில் அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு வனத் துறையின் தலைமை வன உயிரினக் காப்பாளராகப் பணியாற்றி வந்த யுவராஜ் அண்மையில் வனத் துறை தலைவராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த சையத் முஸாமில் அப்பாஸை தலைமை வன உயிரினக் காப்பாளராக நியமித்து வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.
அதேபோல், கையாரட் மோகன்தாஸ் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக சமூக காடுகள், விரிவாக்கம் பிரிவுக்கும், கே.கே.குஷால் முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாலராகவும், சேவா சிங் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.