ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருட்டு

சென்னை அருகே ஆவடியில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருடப்பட்டது
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை அருகே ஆவடியில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் திருடப்பட்டது

சென்னை தியாகராயநகா் லோதிகான் தெருவைச் சோ்ந்தவா் வே.பன்னீா்செல்வம் (48). இவா், ஆவடி சிட்கோ வளாகத்தில் ஒரு அலுமினியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறாா். இங்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினியப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை அண்மையில் திருடப்பட்டதை அறிந்த பன்னீா் செல்வம், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com