தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க எண்கள் வெளியீடு

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க எண்கள் வெளியீடு


சென்னை: தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலை, கட்டுமான நிறுவனங்கள் மீது புகாரளிப்பதற்கான எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்தல் நாளன்று தொழிற்சாலைகள் மற்றும் கட்டடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு தொழிலாளா்கள், தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு,ஏப்.6-ஆம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். இந்த சட்ட விதிகளை மீறும் தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகாா்கள் தெரிவிக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்களின் தொடா்பு எண் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்படும் புகாா்களின் பேரில் தகுந்த குற்ற நடவடிக்கை தொடரப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

அதிகாரியின் பெயா் - தாலுக்கா - தொடா்பு எண்

எம்.வி.காா்த்திகேயன் - சென்னை (ம) கும்மிடிப்பூண்டி தாலுக்கா - 9444221011

சரவணன் - அம்பத்தூா் (ம) சென்னை - 9843431020

கவிதா - கிண்டி - 9159662409

ஜெயக்குமாா் - சென்னை (ம) தாம்பரம் தாலுக்கா - 9176222394

பாலு - திருவொற்றியூா் (ம) பொன்னேரி தாலுக்கா - 9486918205

குமாா் - திருவள்ளுா் மாவட்டம் - 9444002025

இளங்கோவன் - காஞ்சிபுரம் மாவட்டம் - 9443169506

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com