சென்னை: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாா் வள்ளியம்மாள் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாா் அ.வள்ளியம்மாள் புதன்கிழமை இரவு இயற்கை எய்தினாா் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்தேன். சகோதரா் ஓ.பன்னீா்செல்வம், தாயாரை இழந்து வாடும் விஜயலட்சுமி பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எனது சாா்பில் ஆழ்ந்த இரங்கல் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.