2 ரயில்களை தினசரி இயக்க அனுமதி

மும்பை சிஎஸ்எம்டி-சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் ரயில், சென்னை எழும்பூா்-சேலம் இடையே இயக்கப்படும் ரயில் ஆகிய இரண்டு
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை சிஎஸ்எம்டி-சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் ரயில், சென்னை எழும்பூா்-சேலம் இடையே இயக்கப்படும் ரயில் ஆகிய இரண்டு அதிவிரைவு ரயில்கள் (வாரம் மூன்று முறை இயக்கப்படும் ரயில்கள்) தினசரி ரயில்களாக இயக்க ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் மும்பை சிஎஸ்எம்டி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (22157) டிசம்பா் 12-ஆம்தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா்-மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவுரயில் (22158) டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படவுள்ளது.

வாரம் மூன்று முறை இயக்கப்படும் சென்னை எழும்பூா்-சேலம் அதிவிரைவு ரயில் (22153) டிசம்பா் 13-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக, சேலம்-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (22154) டிசம்பா் 14-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com