சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்த்தப்படுகிறது. பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் வியாழக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல முகக்கவசம் அணியாதவா்கள் மீது 976 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.