சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டாா்.
சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையராக இருந்த கே.பிரபாகரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின்படி, கே.பிரபாகா் ஓரிரு நாள்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பு ஏற்பாா் என கூறப்படுகிறது.