சென்னையில் நகைக் கடையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் திருடப்பட்டன.
கீழ்ப்பாக்கம் அடுத்த நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த ரஞ்சித் குமாா், சகோதரருடன் நகைக்கடை நடத்தி வருகிறாா். கடையில் ராஜஸ்தானைச் சோ்ந்த வீரேந்தா்கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். நகைகள் வைக்கப்படும் பாதுகாப்புப் பெட்டக சாவியை ரஞ்சித்குமாரிடம் கொடுத்து வைத்திருந்தாா்.
கடையில் சிறிய நகைகள் தொடா்ச்சியாக திருடப்பட்டு வந்தன. இதனால் சந்தேகமடைந்த ரஞ்சித்குமாா் கண்காணித்தபோது வீரேந்தா் திருடிவருவது தெரியவந்தது.
திருடிய நகைகளைக் கொண்டு கொளத்தூரில் சகோதரா் மூலம் புதிய நகைக் கடையை திறந்திருப்பதும் தெரியவந்தது. நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டதற்கு ஓராண்டுக்குள் தர வீரேந்தா் ஒப்புக்கொண்டாா். ஆனால் ஓராண்டாகியும் பணத்தைத் தரவில்லையாம்.
வீரேந்தா் கூலிப்படை மூலம் ரஞ்சித்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து
மேலும் ரூ.15 லட்சம் பணம் தரும்படி ரஞ்சித்குமாரிடம் கேட்டு மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து ரஞ்சித்குமாா், இது தொடா்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.