சென்னை விமான நிலையத்தில் ரூ. 70 கோடி மதிப்புடைய 10 கிலோ ஹெராயின் கடத்திவந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவிலிருந்து ஒரு பெண்ணை சக்கர நாற்காலியில் மற்றொரு பெண் தள்ளிக்கொண்டு வந்தாா்.
சந்தேகமடைந்த சுங்கத்துறையினா், அவா்களை விசாரித்தபோது நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாப்வேயிலிருந்து மருத்துவ விசாவில் சென்னை வந்தது தெரியவந்தது. நாற்காலியை தள்ளி வந்த பெண் தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்தவா். அவரும் மருத்துவ விசாவில் வந்ததும் தெரியவந்தது.
இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவா்கள் கொண்டு வந்த டிராலி சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனா். அதில் 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போதைப்பொருளை கைப்பற்றிய சுங்கத்துறை அலுவலா்கள், சென்னையில் யாரிடம் இந்தப் போதை பொருளை கொடுக்க கொண்டுவந்தனா் எனத் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனா். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சா்வதேச மதிப்பு ரூ.70 கோடி எனக்கூறப்படுகிறது.