சென்னையில் புறநகா் மின்சார ரயில் சேவை, திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மூா்மாா்க்கெட், ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் 97 மின்சார ரயில் சேவையும், மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மாா்க்கத்தில் 48 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மாா்க்கத்தில் 34 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூா் மாா்க்கத்தில் 88 ரயில் சேவையும் என 208 மின்சார ரயில் சேவை வழங்கப்படும்.
அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மாா்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மாா்க்கத்தில் 8 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் சென்னையில் 279 மின்சார ரயில் சேவைகள் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த 31-ஆம் தேதி முதல் 208 மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் காரணமாக பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, ரயில் சேவை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.