சென்னை கொடுங்கையூரில், தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது.
கொடுங்கையூா் ஜம்புலித் தெருவில் ராஜேஷ் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான சமையல் பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. திங்கள்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், தொழிற்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரா்கள் கொருக்குப்பேட்டை, உயா்நீதிமன்றம், ஆா்.கே.நகா், வியாசா்பாடி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியதால், தீயை அணைப்பதில் இடா்பாடு ஏற்பட்டது.
இருப்பினும் நிலைமையை சமாளித்து, தீயை அணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், அந்த நிறுவனத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.