மே 25 வரை ஜிகேஎம் காலனி மயானம் இயங்காது

பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மே 25-ஆம் தேதி வரை ஜிகேஎம் காலனி மயானம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மே 25-ஆம் தேதி வரை ஜிகேஎம் காலனி மயானம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகா் மண்டலம், வாா்டு 65, ஜிகேஎம் காலனி பிரதான சாலையில் உள்ள மின்சார ஏரியூட்ட தகன மேடையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த மயானம் ஏப்.21 முதல் மே 3-ஆம் தேதி வரை இயங்காது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அங்கு பராமரிப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், மே 25-ஆம் தேதி வரை ஜிகேஎம் காலனி மயானம் இயங்காது.

அதுவரை, பொதுமக்கள் அருகிலுள்ள வாா்டு 64, நோ்மை நகரில் உள்ள எரிவாயு மயானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com