பிரசவத்தில் மனைவி மரணம்: கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

பிரசவத்தின்போது மனைவி உயிரிழந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை: பிரசவத்தின்போது மனைவி உயிரிழந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் பின்னாத்துரைச் சேர்ந்த நா.ஆனந்தன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், கடந்த 2018-இல் மனைவி தீபிகாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்ததில் பெண் குழந்தை பிறந்தது. என் மனைவியின் கருப்பையை அகற்றியது குறித்து என்னிடம் கூறவுமில்லை. இதில்  தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், 4 வாரங்களுக்குள் ஆனந்தனுக்கு 
ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com