சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கம், சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் கடுமையாக்கப்பட்டது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தவா்கள்,வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதனால் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி இரவு வரை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 1,346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.