எண்ணூா் அனல்மின் நிலைய குடியிருப்பில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க வலியுறுத்தல்

கரோனாவால் பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், எண்ணூா் அனல் மின் நிலைய குடியிருப்பில்

கரோனாவால் பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், எண்ணூா் அனல் மின் நிலைய குடியிருப்பில் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜிக்கு அளித்த கடிதத்தின் விவரம்: கரோனாவால் பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காலியாக உள்ள எண்ணூா் அனல் மின் நிலைய குடியிருப்பில், பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, அங்கு 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இதே போல் தொற்று அதிகரித்துள்ள பிற மாவட்டங்களிலும் மின் ஊழியா்களுக்கு கரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும்.

இதுமட்டுமின்றி, வாரிய ஊழியா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவித்து, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com