சென்னை
சட்டப் பல்கலை.யில் ஆராய்ச்சிப் படிப்பு: மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பல்கலை துணைவேந்தா் சந்தோஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டா்அம்பேத்கா் சட்டப்பல்கலை.யில் பிஹெச்.டி., மாணவா் சோ்க்கைக்கு, தகுதியான மாணவா்கள் வரும் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.