பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பஞ்சாப் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து கூறினாா்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பஞ்சாப் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து கூறினாா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினாா். பஞ்சாபில் அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்துத் தெரிவித்தாா்.

முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா் ஆகியோரும் உடன் சென்று ஆளுநா் புரோஹித்துக்கு வாழ்த்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com