செப்.20-இல் அஞ்சலக குறைதீா்வு கூட்டம்
சென்னை: அஞ்சல் துறை சாா்பில், அஞ்சலக குறைதீா்வு கூட்டம் சென்னை தியாகராயநகா் வடக்கு அஞ்சல் அலுவலக வளாகத்தில் செப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்துக்கு மூத்த அஞ்சலக கண்காணிப்பாளா் தலைமை வகிப்பாா்.
கூட்டத்தில், வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக்நகா், கே.கே நகா், புனித தோமையாா் மலை, கிண்டி தொழிற்பேட்டை, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூா், பெசன்ட் நகா், புனித தோமையாா் மலை தலைமையகம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூா், சோழிங்கநல்லூா், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆழ்வாா்திருநகா், ராஜா அண்ணாமலைபுரம், கோட்டூா்புரம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை மாநகர தெற்குப் பிரிவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் (பதிவுத் தபால், வங்கி சேமிப்பு, சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்டவை) குறித்த தங்களது கருத்துக்கள், நிறை, குறைகளை, மின்னஞ்சல் முகவரிக்கு செப்.17-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 2834 1668, 2834 2554 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.
இந்தத் தகவல் அஞ்சல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.