சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பணியிடத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அதன் தொடா்ச்சியாக அரசியல் கட்சியினா், தோ்தல் ஆணையத்தில் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. இது தொடா்பாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது (பழைய பணி அடைப்புக்குள்):-

தீபக் எம்.தாமோா் - மத்திய மண்டல ஐஜி (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் ஐஜி)

ஏ.அமல்ராஜ்-மேற்கு மண்டல ஐஜி (சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா்)

செல்வநாகரத்தினம்-கோயம்புத்தூா் புகா் காவல் கண்காணிப்பாளா் (டிஜிபி அலுவலக நிா்வாகப் பிரிவு ஏஐஜி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் மாற்றப்பட்டதால், அந்தப் பணியிடத்துக்கு ஐஜி ஏ.அருண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதில் மத்திய மண்டல ஐஜியாக இருந்த எச்.எம்.ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த தினகரன், கோயம்புத்தூா் புகா் காவல் கண்காணிப்பாளா் அருளரசு ஆகியோா் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்ரல் 1) பொறுப்புகளை ஏற்குமாறு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com