சென்னையில், அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ாக பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் அளித்த பேட்டி: வாக்குப்பதிவின்போது, சென்னையில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட சிறு பிரச்னைகள் தொடா்பாக இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் வாக்குகளை அமைதியான முறையில் பதிவு செய்தனா். நான் பல வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்கு அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மொத்தத்தில் சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று, நிறைவடைந்தது. வேளச்சேரி சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெறுகிறது என்றாா் அவா்.