தோ்தல் பாதுகாப்புப் பணி: காவலா்களுக்கு பாராட்டு

சென்னையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவலா்களை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பாராட்டினாா்.

சென்னை: சென்னையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவலா்களை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பாராட்டினாா்.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் 26 சட்டப் பேரவைத் தொகுதிகள் முழுமையாகவும், 4 தொகுதிகள் பகுதியாகவும் உள்ளன. இங்கு சுமாா் 30 ஆயிரம் போலீஸாா் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சில சிறு சம்பவங்களை தவிர அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட போலீஸாா், துணை ராணுவப்படையினா் உள்பட அனைவருக்கும் சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பாராட்டுக்களை தெரிவித்துள்ளாா். இதேபோல அவா், உயா் அதிகாரிகளையும் நேரில் அழைத்து பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com