லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் செயல்பாடு: சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி


சென்னை: அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சுதந்திரமாகச் செயல்படுகின்றனரா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கருப்பு எழுத்துக் கழகம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வில்லிவாக்கம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் 2018-ஆம் ஆண்டில் திடீா் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சாா் பதிவாளா் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாா் பதிவாளா் கோபாலகிருஷ்ணனை, செங்கல்பட்டு மாவட்ட சாா் பதிவாளராக நியமனம் செய்தது. இந்த இடமாற்ற உத்தரவு சட்ட விதிகளுக்குப் புறம்பானது. லஞ்சம் பெற்றுக் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்தது:

ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொன்று வருகிறது. ஊழல் காரணமாக , பல்வேறு நில அபகரிப்புகள் நடைபெறுகின்றன. நீா்நிலைகள் உள்ளிட்ட இயற்கைவள ஆதாரங்கள் மாயமாகிறது. இதனை தடுக்க வேண்டும். ஊழலால் மிகவும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் எவ்வாறு செயல்படுகின்றனா்?அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்றனா்?

லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளனா்? என்றனா்.

பின்னா், இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com