முழு பொதுமுடக்கம்: சென்னையில் 673 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தை மீறியதாக 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தை மீறியதாக 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இரவு ஊரடங்கின் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

இந்த பொதுமுடக்கத்தின்போது பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊா்திகள், அவசர மற்றும் அமரா் ஊா்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. தடையை மீறி வெளியே வரும் வாகனங்கள், தேவையின்றி வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது.

இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினா். மீறி வெளியே வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை அமலில் இருந்த தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தை மீறி இயக்கப்பட்ட 673 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் போக்குவரத்து போலீஸாா் 474 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா் 199 வாகனங்களை பறிமுதல் செய்தனா். இந்த வாகனங்களுக்குரிய அபராதம் உடனே செலுத்தப்பட்டாலும், அதை உடனே உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கூடாது என போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com