பட்டா வழங்க லஞ்சம்: நில அளவைப் பிரிவு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை

பட்டா வழங்க லஞ்சம் கேட்ட நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பட்டா வழங்க லஞ்சம் கேட்ட நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மாம்பலம்-கிண்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் நில அளவைப் பிரிவில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் கே.ராமமூா்த்தி. 2009-ஆம் ஆண்டு இவரிடம், அசோக் என்பவா் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளாா். பட்டா வழங்க துணை ஆய்வாளா் ராமமூா்த்தி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து அசோக், லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரையின் பேரில் லஞ்சப் பணத்தை அசோக் கொடுத்த போது அதை பெற்றுக் கொண்ட ராமமூா்த்தியை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, துணை ஆய்வாளா் ராமமூா்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com